இயற்கையோடு ஒன்றி வாழ்ந்து தங்கள் உடலாலும் மனதாலும் உணர்ந்து கண்டறிந்த அற்புதமான மரபு வழிப்பட்ட வாழ்வியலையும் உணவியலையும் மருத்துவ முறைகளையும் தந்து உலகிற்கே வழிகாட்டியாக இருந்தது, இருந்து கெண்டிருப்பது தமிழினம். ஆனால் இன்று உடல் மன ஆரோக்கியத்தை இழந்து கொண்டிருக்கிறது.
இதற்கு காரணம் மரபை அலட்சியப்படுத்தி முறையற்ற வாழ்வியல் முறைகளையும், உணவு முறைகளையும், மாற்று மருத்துவத்தையும் பின்பற்றியதே. மாற்று மருத்துவம் என்று சொல்வது ஆங்கில மருத்துவத்தைத்தான். உடலை பேணுவது என்றால் வெறும் அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவதும், பிறர் பார்வைக்கு ஆடைகளை அணிவதும், விலை உயர்ந்த அணிகலன்களை அனிவதும் இல்லை. உடலை பேணுவது என்றால் உடலில் உள்ள உள்ளுறுப்புகளைப் பேணுவதாகும். இன்றுள்ள அநேக நோய்களுக்கு காரணம் முறையற்ற உணவுகளை உட்கொள்வதால் உங்களது வயிறும் குடலும் கெட்டு தேக்கமடைந்த கழிவுகளை வெளியேற்ற முடியாமல் குடல் பாடுபடும்.
நாள்பட்ட கழிவுகள் குடலில் தேங்கி குடல் அசுத்தமடையும். இதனால்,
- இடுப்பு வலி
- வயிறு உப்புசம்
- உடல் பருமன்
- பயம்
- பதட்டம்
- மலச்சிக்கல்
- மாதவிடாய் கோளாறுகள்
- தோல் நோய்கள்
- கெட்ட கொழுப்பு
- மாரடைப்பு
- உறக்கமின்மை
- பசியின்மை
- மன நல பாதிப்பு
- ஆண்மை குறைவு
- கருப்பை கோளாறுகள்
- சிறுநீரக செயல்பாடு குறைதல்
- சர்க்கரை
- அல்சர் வரக்கூடும்.
குடல் சுத்தமே உடல் சுத்தம். சுத்தமான குடல் இருந்தால் மனம் சுத்தத்தையே நாடும்.
“குடல் சுத்தமே ஆரோக்கியத்தின் முதல்படி”
மனித உடல் ஆரோக்கியத்திற்கு, அடிப்படையான தேவை என்பது குடலில் தேங்கியுள்ள நாட்பட்ட தேக்கமடைந்த கழிவுகளை வெளியேற்றுவதாகும்.
நமது ஆரா யோகா மையத்தில் மிக எளிய முறையில் மிக நேர்த்தியான முறையில் திடக்கழிவு, திரவக்கழிவு, காற்று கழிவுகளை வெளியேற்றும் முறைகள் பின்பற்றப்படுகின்றன.
- பெருங்குடல் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு
- சிறுநீரக உறுப்பையும் சுத்தப்படுத்தி
- கல்லீரலின் ஆற்றலைப் பெருக்கி
- நீராவி குளியல் கொடுத்து
உடலிலுள்ள நச்சுத்தன்மைகளை அகற்றும் முறைகளும் கொடுக்கப்படுகின்றது.
உடலில் சேர்ந்த நாட்பட்ட கழிவுகளை நீக்காமல், உடல் உபாதைகளில் அவஸ்தைபடுபவர்கள், வருடக் கணக்கில் மருந்து, மாத்திரைகளை எடுத்து உடலைச் சிதைத்துக் கொண்டிருப்பவர்கள், மிக எளிய முறையில் மருந்துகளே இல்லாமல் உங்களை நீங்களே குணப்படுத்திக் கொள்ளலாம்.
உடல், மன ஆரோக்கியத்திற்கு பொருந்தக் கூடிய உணவு முறைகளையும் வாழ்வியல் முறைகளையும், மனதை மேம்பாடடையும் வழிமுறைகளையும் கொடுத்து,
ஆரா யோகா மையம் நீங்கள் வாழ்வில் என்றும் நலமும் வளமும் பெற வழிகாட்டியாக துணையாக செயல்படும்.
உடல் கழிவு நீக்க செயல்முறைக்கு முன்...
- நச்சு நீக்கம் செய்வதற்கு முன் அனைவரும் வெறும் வயிற்றில் வர வேண்டும்.
- உணவு உட்கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
- முடிந்தவரை தண்ணீர் உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.
- ஆண்கள் 1 லுங்கி, 2 டவல் மற்றும் 1 பெட்ஷீட் கொண்டு வர வேண்டும்.
- பெண்கள் 1 நைட்டி, 2 டவல் மற்றும் 1 பெட்ஷீட் கொண்டு வர வேண்டும்.
சிகிச்சை முறை:-
கழிவு நீக்கும் முதல் நாளில்,
- எலுமிச்சை நீர் எனிமாவை ஆசனவாய் வழியாக சிகிச்சையாளர் கைமுறையாகக் கொடுப்பார். அதனால் குடலில் சேரும் திடக்கழிவுகள் சுத்தமாகும்.
- எலுமிச்சை நீர் எனிமாவுக்குப் பிறகு நீராவிக் குளியல் கொடுக்கப்படும், இதனால் ரத்தத்தில் உள்ள நச்சுகள் வெளியேறும்.
- அதன் பிறகு சிறுநீரகத்தை சுத்தப்படுத்தும் பானம் வழங்கப்படும். இதனால் கிட்னியில் சேரும் கழிவுகள் சுத்தமாகும்.
- இதை காலை 8 மணி முதல் 12 மணி வரை மட்டுமே செய்ய வேண்டும்.
கழிவு நீக்கும் இரண்டாம் நாளில்,
- மோர் எனிமா, சிகிச்சை நிபுணரால் ஆசனவாய் மூலம் கைமுறையாக வழங்கப்படும். அதனால் குடலில் சேரும் வாயுக் கழிவுகள் சுத்தமாகும்.
- இப்போது, மண்டல கழிவு நீக்கம் முடிந்தது.
குறிப்பு:
நச்சு நீக்கம் செய்யப்பட்ட இரண்டு நாட்களில், செயல்முறைக்கு உட்பட்டவர்கள் பழங்கள் மற்றும் பழச்சாறுகளை மட்டுமே உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
உடல் கழிவு நீக்க செயல்முறைக்குப் பிறகு,
- மண்டல கழிவு நீக்கத்தை தொடர்ந்து உறுப்பு கழிவு நீக்கம் இடம்பெறும். அனைத்து உறுப்புகளின் ராஜா, அதாவது கல்லீரல் இந்த செயல்முறைக்குப் பிறகு சுத்தப்படுத்தப்பட வேண்டும்.
- மண்டல கழிவு நீக்கத்தின் இரண்டு நாட்களுக்குப் பிறகு இதைச் செய்ய வேண்டும். அதற்காக எங்கள் மையத்தில் உள்ள சிகிச்சையாளர்களால் “லிவர் பேக்” எனப்படும் செயல்முறை செய்துகாட்டப்பட்டு, செயல்முறையின் வீடியோவும் வழங்கப்படும். இந்த செயல்முறை 14 நாட்களுக்கு, ஒரு வழக்கமான அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.
- மண்டல கழிவு நீக்கத்திற்குப் பிறகு 14 நாட்கள் அல்கலைன் உணவுத் திட்டம் வழங்கப்படும். இந்த உணவு அமில உடலை கார உடலாக மாற்ற உதவுகிறது.
உடல் கழிவு நீக்கத்தின் நன்மைகள்
- உடலின் ஆற்றல் அளவை அதிகரிக்க உதவும்.
- வயதான தோற்றத்திற்கு எதிர்ப்பு மற்றும் ஆரோக்கியமான சருமத்தை மேம்படுத்த உதவும்.
- உடல் எடையை குறைக்க உதவுகிறது.
- உடலின் பாதுகாப்பை பலவீனப்படுத்தும் நச்சுகளை அகற்றுவதன் மூலம் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
- உடல் கழிவு நீக்கம், நீங்கள் தெளிவாக சிந்திக்கவும், உணர்ச்சிகளை சமநிலைப்படுத்தவும், மன அழுத்தத்தை வியத்தகு முறையில் குறைக்கவும் உதவும்.
- வாய் துர்நாற்றத்திற்கு ஒரு முக்கியமான பங்களிப்பானது பெருங்குடலாகும். கழிவு நீக்கும் போது, சிறந்த சுவாசம் மேம்படும்.
- புகைபிடித்தல், மது அருந்துதல் அல்லது ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பது போன்ற கெட்ட பழக்கங்களை அகற்றவும் கழிவு நீக்கம் உதவும்.
- கழிவு நீக்குதல் உங்கள் உடல், மன மற்றும் உணர்ச்சி ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும்.
- கழிவு நீக்கம், நச்சுகளை அகற்றுவதன் மூலம் உங்கள் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது மற்றும் உங்கள் செரிமான அமைப்பு மிகவும் திறமையாக செயல்பட அனுமதிக்கிறது.
விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
- முன்பதிவு கட்டாயமாகும்.
- மாதவிடாய் காலத்தில் பெண்கள் இந்த சிகிச்சையில் கலந்து கொள்ளக்கூடாது.
- கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு கழிவு நீக்கும் செயல்முறை வழங்கப்படாது.
- பதிவு செய்தவர்கள் சிகிச்சையில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் அல்லது கட்டணம் திருப்பித் தரப்படாது.
அரா யோகா மையத்தில் உடல் கழிவு நீக்கம் செய்யப்படும் நாட்கள்
திருச்சி மையம் : திங்கள் மற்றும் செவ்வாய் கிழமை
ஈரோடு மையம் : செவ்வாய் மற்றும் புதன்கிழமை
பெங்களூர் மையம் : புதன் மற்றும் வியாழக்கிழமை
சென்னை மையம் : வெள்ளி மற்றும் சனிக்கிழமை
முன்பதிவு மற்றும் கட்டண விவரங்கள் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு +91 9384087393, +91 9384087391 என்ற எண்களுக்குத் தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.